சாமி கும்பிட வந்தவரின் திடீர் மனமாற்றம்! அம்மனிடமே வேலையை காண்பித்த நபர்!!
theft in temple at namakkal district
நாமக்கல்லில் உள்ள பள்ளிபாளையம் பெரியார் நகரில், பெரிய மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அங்கு கருவறையில் இருந்த அம்மனின் கழுத்தில் நகைகள் திருடுபோயிருந்தன.
எனவே, இதுகுறித்து கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கோவில் நிர்வாகத்தினர் சோதனை செய்து பார்த்தார்கள். அப்போது நபர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்குள் வருகிறார்.
அப்போது கோவிலினுள் யாரும் இல்லாததை கண்டு திடீர் மனமாற்றம் அடைந்த அந்த நபர், சுற்றுமுற்றும் பார்த்து பின்னர் வெகு இயல்பாக கருவறைக்குள் சென்று அம்மனின் நகைகளை திருடிக் கொண்டு அமைதியாக சென்றுள்ளார்.
இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை கண்ட கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து உடனே பள்ளிபாளையம் காவல் நிலையத்தில், சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகிறது.
English Summary
theft in temple at namakkal district