#திண்டுக்கல் மாவட்டம் || 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர்.! போக்சோவில் கைது.!
The youth who abducted the girl was arrested in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பல்லானத்தன் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்தன். இவரது மகன் அய்யனார்(வயது 21) என்பவர் நெற்றிப் பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியான பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அய்யனார் கடத்தி சென்றுள்ளார்.
இதையடுத்து மகள் காணவில்லை என்பதால் பல இடங்களில் தேடி பார்த்த பெற்றோர் இதுகுறித்து குஜிலியம்பாறை காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அய்யனார் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்த நிலையில், அவர் பயன்படுத்திய செல்போன் சிக்னல் மூலமாக திருப்பூரில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு சென்று பார்த்தபோது அய்யனார் சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களை அழைத்து வந்த போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, அய்யனார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
The youth who abducted the girl was arrested in Dindigul