நாமக்கல் : தொழிலாளியை சரமாரியாக கம்பியால் தாக்கிய இளைஞர் கைது.!
The youth arrested for beaten worker in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளியை சரமாரியாக கம்பியால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார்(25). இவர் அதே பகுதியில் உள்ள மஞ்சள் குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி நந்தகுமாரை(19) அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(24) என்பவர் குடிபோதையில் தாக்கியுள்ளார்.
இதையறிந்த அஜித்குமார் தம்பியை அடித்தது குறித்து அலெக்ஸ் பாண்டியனிடம் கேட்டுள்ளார். அப்பொழுது இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த அலெக்ஸ் பாண்டியன் தனது தந்தை மற்றும் குமரகுரு ஆகியோர் சேர்ந்து அஜித் குமாரை கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியன் கைது செய்தனர்.
மேலும் அஜித் குமாரை தாக்கிய அலெக்ஸ் பாண்டியன் தந்தை மற்றும் குமரகுரு என்பவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The youth arrested for beaten worker in namakkal