#சேலம் || திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்.! கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற இளைஞர்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம்பெண் மீது கல்லை தூக்கிப் போட்டு படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டத்திலுள்ள கூடமலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு நந்தினி(வயது 22), ரோஜா(வயது 20) என்று இரு மகள்கள் உள்ளனர்.

இதில் ரோஜா ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரோஜாவை ஆத்தூர் தாண்டவராயபுரத்தை சேர்ந்த ராமரின் மகன், சாமிதுரை(வயது22) மூன்று வருடமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சாமிதுரை ரோஜாவிடம் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்து கொள்ளுமாறும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரோஜாவின் அக்கா நந்தினியின், திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரோஜாவிடம் சாமிதுரை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி தகராறு செய்துள்ளார்.

இதில் தகராறு முற்றிய நிலையில் சாமிதுரை, அருகே இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ரோஜா மற்றும் ரோஜாவின் அக்கா நந்தினி மீதும் ஊற்றி உள்ளார்.

அக்கா நந்தினி தப்பி ஓடிய நிலையில், ரோஜா அருகில் இருந்த சேற்றில் விழுந்ததால் தீ வைக்க முடியாத ஆத்திரத்தில், அருகே கிடந்த பெரிய கல்லை தூக்கி ரோஜா மீது போட்டுவிட்டு சாமிதுரை தப்பி ஓடியுள்ளார்.

இதில் ரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி காவல்துறையினர், சடலத்தை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய சாமிதுரையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young man who stoned a woman who refused to marry in selam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->