திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கள்ளகாதலி கொலை.. சேலத்தில் பரபரப்பு..!
The young man who killed his girlfriend who forced him to get married
கள்ளகாதலி திருமணம் செய்து கொள்ள கூறியதால் வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் லார்ட்ஜில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அந்த பெண் கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரது மனைவி சிலம்பரசி என்பது தெரியவந்தது. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கருப்பையா வெளி நாட்டில் வேலை வருவதால் அவர் மட்டும் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிலம்பரசிக்கும் அந்த பகுதியில் உள்ள இளங்கோ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளகாதலாக மாறியது. இதனால், இருவரும் தனிமையாக சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இளங்கோவை பிடித்து விசாரித்த காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சிலம்பரசி இளங்கோவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் ஆத்தூருக்கு அழைத்து வந்து அவரை கொலை செய்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The young man who killed his girlfriend who forced him to get married