ஒருதலை காதலால் மாணவியை தொல்லை செய்த இளைஞர்., தட்டிகேட்ட சகோதரியின் கணவர் குத்தி கொலை..!! திண்டுக்கல்லில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


ஒருதலை காதலை தட்டி கேட்டவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுகல் மாவட்டம், பூலத்தூர்  பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(24). இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவி இருக்கிறார். மணிமாறன் அந்த பகுதியில் விவசாய கூலியாக வேலை பார்த்து வருகிறார்.

ரம்யாவின் சகோதரி +2 படித்து வருகிறார். இவரை  அந்த பகுதியை சேர்ந்த சுரேந்தர்(22) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவியை காதலிக்க சொல்லி சுரேந்தர் தொல்லை செய்துள்ளார். மாணவியின் செல்போனுக்கு அவர் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்துவந்துள்ளார்.

இவரின் தொல்லை குறித்து மாணவி தனது சகோதரியின் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த பகுதியில் நடந்த திருவிழாற்விற்கு சுரேந்தர் வந்துள்ளார். அப்போது மணிமாறன் எனது கொளுந்தியாளுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தி கொள்ளுமாறு எச்சரிர்த்துள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே சுரேந்தர் தான் வைத்திருந்த கத்தியால் மணிமாறனை குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மணிமாறன் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து சுரேந்தரன் தப்பியோடிவிட்டார்.

இதனை அடுத்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த சுரேந்தரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young man who harassed the student was stabbed by the assailant


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->