மதுவுக்கு அடிமையான கணவன். கொலை செய்த மனைவி.! திண்டுக்கலில் நடந்த பரபரப்பு சம்பவம்...!! - Seithipunal
Seithipunal


மதுபழக்கத்திற்கு அடிமையான கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வாய்க்கால்பாலம் பகுதியை சேர்ந்தவர் கருப்புச்சாமி (45) இவருக்கு திருமணமாகி மீனாட்சி  என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கருப்புச்சாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் வேலைக்கு  செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டது.

மேலும், சொந்த வீட்டையும் விற்று மது குடித்துள்ளார். இதனால், மீனாட்சி தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கருப்புச்சாமி இனி குடிக்க மாட்டேன் என கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மீண்டும் மது அருந்தி விட்டு தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து ஆத்திரமடைந்த மீனாட்சி,  அவரது உறவினர்கள் கருப்புசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர்  அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்ய்துறையினர் மீனாட்சி மற்றும் அவரது உறவினர்களை கைது செய்தனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wife who killed her husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->