கத்திகுத்து காயத்துடன் காவல் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த இளம்பெண்ணால் பரபரப்பு..!
The teenager came to the police inspector's office with a stab wound
காயத்துடன் இளம்பெண் காவல் நிலையத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னாளபட்டியில் சேர்ந்தவர் ரவி இவருக்கு அருணா என்ற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
இன்று அருணா கத்திக்குத்து காயத்துடன் காஞ்சிபுரம் காவல் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தாய் வீட்டிற்கு சென்ற தங்கை கணவன் சமாதானம் செய்து அழைத்து வந்ததாகவும் வீட்டிற்கு வந்ததும் ரவி மற்றும் சிலர் தன்னை கத்தியால் வெட்டினர் எனவும் தெரிவித்தார்.
மேலும், தடுக்க வந்த தம்பி மற்றும் தாயையும் வெட்டியதாக தெரிவித்தார். அவரது புகாரை பெற்ற காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கத்திகுத்து காயத்துடன் இளம்பெண் காவல் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The teenager came to the police inspector's office with a stab wound