கரூரில் பாலியல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவியின் பதறவைக்கும் கடிதம்..! - Seithipunal
Seithipunal


பாலியல் துன்புறுத்தலால் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியிய ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் துன்புறுத்தல்களால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் நடந்து வருகிறது.

சமீபமாக கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதன் தாக்கம் இன்னும் குறையாத சூழலில் கரூரில்  12 வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் மாணவி ஒருவர் வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில  நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது தாய் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அம்மாணவியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அந்த சிறுமி இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில்  sexual harassment ல சாகுற கடைசி பொண்ணு நானா தான் இருக்கனும் என உருக்கமாக எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The student who committed suicide by being sexually harassed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->