உள்வாங்கிய கடல்.. பாசிகளையும், சிவலிங்கத்தையும் கண்ட மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடல் திடீரென உள்வாங்கி, பாசிகள் மற்றும் பாறைகள், கடலுக்குள் இருந்த சிவலிங்கங்கள் வெளியே தெரிந்தது. 

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சில சமயங்களில் கடல் உள்வாங்குவது ஐயப்பனை ஒன்றாகும். அவ்வப்போது கடல்நீர் உள்வாங்குவது தொடர்பான விஷயங்கள் நடக்கும் நேரத்தில் பாசிகள் மற்றும் பாறைகள் தென்படும். 

தற்போது இராமேஸ்வரத்தில் இருக்கும் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் உள்ள சங்குமால் பகுதியில் கடல் வழக்கம்போல இருந்த நிலையில், 10 மணியின் போது திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்கு அடியில் இருந்து பாசிகள் தென்பட்டது. 

மேலும், கடல் புற்கள் பச்சை பசேலென காட்சியளித்த நிலையில், கடலுக்குள் இருந்த சிவலிங்கமும் தெளிவாக தென்பட்டது. மேலும், கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படகுகளும் தரைதட்டி இருந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The sea was inland Rameswaram sea area


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->