சேலையூரில் பரபரப்பு.! ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி, மகள் உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி.!
The realestate tycoon daughter wife cut by a rowdy in selaiyur
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி, மகள் உள்பட 4 பேரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த சேலையூர் சாந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தனது சகோதரர் மாணிக்கம் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்தார்.
அப்பொழுது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் வீடு புகுந்து புகுந்த சங்கரின் கை தோள்பட்டையில் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சங்கரின் தாய் குஞ்சாராம், மனைவி பேபி, மகள் ராஜேஸ்வரி(28) ஆகிய 3 பேருக்கும் கையில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதைபார்த்த மர்ம நபர்கள், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் வெட்டு காயமடைந்த 4 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சங்கரின் மனைவி மற்றும் மகள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டியது சேலையூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான ராஜசேகர்(28) என்பதும், அவர் தனது நண்பருடன் சேர்ந்து இந்த சம்பவத்தை செய்ததும் தெரியவந்தது.
மேலும் சங்கர் அப்பகுதியில் ரவுடிகள் நடமாட்டம் குறித்து, சேலையூர் காவல் நிலையத்திற்கு அடிக்கடி தகவல் கொடுத்து வந்ததன் காரணமாக சங்கரை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் தலைமறைவான ரவுடி ராஜசேகர் உள்ளிட்ட இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The realestate tycoon daughter wife cut by a rowdy in selaiyur