அண்ணனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய தம்பி.! போலீசார் வலைவீச்சு.!
The police looking for the brother who attacked his brother in Tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணனை தாக்கி விட்டு தப்பி ஓடிய தம்பியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூங்கில் அடி வெப்பம் தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஸ்டீபன்ராஜ்(42). இவர் தந்தை அல்போன்ஸ்க்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இதனால் அந்த வீட்டை தன் பெயருக்கு எழுதி தருமாறு தந்தையிடம் ஸ்டீபன்ராஜ் கேட்டுள்ளார்.
இதனை அறிந்த அவரது தம்பி செல்வகுமார், ஸ்டீபன்ராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தகராறு முற்றிய நிலையில ஆத்திரமடைந்த செல்வகுமார், அண்ணன் ஸ்டீபன்ராஜை கம்பால் தாக்கி விட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து காயமடைந்த ஸ்டீபன்ராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து களக்காடு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அண்ணனைத் தாக்கி விட்டு சென்ற தம்பியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The police looking for the brother who attacked his brother in Tirunelveli