பொள்ளாச்சி || அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாயம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
The police are investigating the disappearance of a baby born in a government hospital
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரது மனைவி திவ்யபாரதி கடந்த திங்கள்கிழமை பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். இவருக்கு கடந்த புதன் அன்று பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால் குழந்தையை கடத்தி சென்றவர்கள் யார் என்பதில் காவல்துறையினர் குழப்பமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தை விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்டதா அல்லது வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்பது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The police are investigating the disappearance of a baby born in a government hospital