ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சிறுமி., இளைஞர் போக்சோவில் கைது...!! - Seithipunal
Seithipunal


10 ஆம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர்  பகுதியில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரும் அந்த பகுதியில் உடற்பயிற்சிகூடம் வைத்துள்ள அரவிந்தன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் மிகவும் நெருக்கமாக பழகிவந்தனர். இதனை அவர் தனது செல்போனில் மறைமுகமாக போட்டோ, வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த போட்டோக்களை வைத்து அந்த சிறுமியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயங்கி கிடந்த அவரை மீட்ட அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து அந்த சிறுமி அவர் பெற்றோர்களிடம் தெரிவித்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The person who took the pornographic picture of the girl and threatened her has been arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->