சிக்னல் கிடைக்கல.. செல்போன் டவர் மீது ஏறிய குடிமகனால பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


மது போதையில் செல்போன் டவர் மீது ஏறிய நபரை காவல்துறையினர் மீட்டனர்.

கரூர் சின்னஆண்டான்கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் புத்தாண்டு தினத்தன்று மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து, அவர் போன் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால்,அவர் வேலை செய்த கட்டிடத்தின் மீதுள்ள செல்போன் டவரில் மது போதையில் ஏறியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புதுறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திடீரென மழை செய்ததால் அவர் செல்போன் டவரில் இருந்து மளமளவென இறங்கினார். தீயணைப்புதுறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரபப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The person who climbed the cell phone tower


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->