பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சோமாசி பாளையத்தை சேர்ந்தவர் கொத்தனார் புகழேந்தி. இவர் தேவிநந்தல் பேருந்து நிலையம் அருகே இருந்த பாலத்தின் தடுப்புகட்டையில் உட்கார்ந்து இருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் காவல்துறையினர், உயிரிழந்த புகழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The person fell from the bridge and died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->