இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்.. திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் ஸ்ரீரடி புரம் சர்வ சக்தி தியான பீடம் உள்ளது. தியான பீடத்தை சங்கநாதன் என்பவரும் அவரது மனைவியும் நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த தியான பீடத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொளத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தனது தாயின் உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்ரமத்திற்கு விபூதி வாங்க வந்தார். அப்போது சங்கர நாதன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர் சுயநினைவை இழந்த பின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நினைவு வந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து கேட்டபோது வெளியில் சொன்னால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சங்கர நாதன் மற்றும் அவரது மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The pastor who sexually abused the teenager


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->