மது அருந்தினால் டிக்கெட் கிடையாது.. திரையரங்கை அடித்து உடைத்த கும்பல்..!
The mob that broke into the theater
மதுபோதையில் திரையரங்கை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் தேரடி அருகே உள்ள தனியார் திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கில் மது அருந்தி வருபவர்களுக்கு டிக்டெட் விற்பனை செய்வதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சிலர் மது அருந்திவிட்டு வந்து டிக்கெட் கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு திரையரங்க நிர்வாகம் மறுத்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் திரையரங்கில் புகுந்து பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி பலமாக தாக்கியுள்ளனர். மேலும், திரையரங்கை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து திரையரங்கு நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் திரையரங்கை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்ட்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The mob that broke into the theater