மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் 18 வருடங்களுக்கு பிறகு கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 18 வருடங்களாக தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ராக்கிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் இராமலிங்கம் (50). இவருடைய மனைவி செல்லம்மாள். இந்நிலையில் மனைவி செல்லம்மாவிடம் நகை, பணம் வாங்கி வரும்படி ராமலிங்கம் கொடுமைப்படுத்தி கொலை செய்ய முயன்றதாக கடந்த 2014ஆம் ஆண்டு கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு ஜாமீனில் வெளியே வந்த ராமலிங்கம், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து தலைமறைவான ராமலிங்கத்தை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் 18 வருடங்களாக தலைமறைவாக இருந்த ராமலிங்கத்தை தர்மபுரி மாவட்டம் அச்சல்வாடியில் போலீசார் கைது செய்தனர். பின்பு ராமலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband who tried to kill his wife was arrested after 18 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->