மனைவி மீது சந்தேகம் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்..!! ராமநாதபுரத்தில் பரபரப்பு...!!
The husband who strangled and killed his wife out of suspicion
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம்., ஏனாதி கிராமத்தில் வசித்து வருபவர் மாடசாமி. இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுள்ளது..
இதனால் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து அவர்களீம் உறவினர்கள் இவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதனால் மீண்டும் கணவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில், சமீபமாக மனைவியின் மீது மாடசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இவருக்கு இடையில் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.இதனால் சம்பவதன்று, நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த தனது மனைவியின் கழுத்ததை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து மாடசாமியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The husband who strangled and killed his wife out of suspicion