அரிவாள்மனையால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்.! போலீசார் வலைவீச்சு.!
The husband who murder his wife in thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை அரிவாள்மனையால் வெட்டி கொடூரமாக கொன்ற கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மடப்புரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேதையன் (50). இவரது மனைவி லதா (45). இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து இன்று காலை இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வேதையன், மனைவியை அருவாமனையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள வேதையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The husband who murder his wife in thiruvarur