மின்சாரம் தாக்கி பலியான சிறுமி.. ராணிபேட்டை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகள் ஷாலினி  அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். காலையில் பள்ளிக்கு கிளம்பிகொண்டிருந்த அவர் தண்ணிர் தொட்டி அருகே இருந்த மோட்டார் ஸ்விட்ச்யை நிறுத்துவதற்காக  சென்றார்.

அப்போது, அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl who was electrocuted


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->