வீட்டின் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன்.. துடிதுடிக்க அரங்கேறிய சோகம்.!!
The girl who was alone in the house raped
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சித்தூர் ரோடு பகுதியை சார்ந்த 17 வயதாகும் சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் இப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் நேற்று மாலை நேரத்தில் பள்ளியை முடித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்த நிலையில், இவரது பெற்றோர்களும் பணிக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூரை சார்ந்த வாலிபன் இப்பகுதியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்துள்ளான்.
இவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ள நிலையில், மாணவி தனிமையில் இருப்பதை அறிந்து கொண்டு சிறுமியின் இல்லத்தில் அத்துமீறி நுழைந்துள்ளான். இவன் வீட்டிற்குள் நுழைந்து கதவை தாளிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி அலறியுள்ளார்.
இவரது அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்காத நிலையில், காமுகன் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பி செல்லவே, பெற்றோர்கள் வீட்டிற்கு வந்ததும் மாணவி தனக்கு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The girl who was alone in the house raped