பெற்றோர் செல்போன் வாங்கிதராததால் சிறுமி தற்கொலை., தஞ்சையில் நடந்த சோகம்...!! - Seithipunal
Seithipunal


செல்போன் வாங்கிதராததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், தேவராயன்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் மாதவன். இவர் அந்த பகுதியில் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கனிஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

கனிஸ்ரீ அருகில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.  இதனிடையே அவர் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கிதர சொல்லி கேட்டுள்ளார். அவர்களும் பிறகு வாங்கிதருவதாக சொல்லியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில்  யாரும் இல்லாத போது எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மயக்கமடைந்து கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl committed suicide because she did not buy a cell phone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->