பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை..!! ஈரோட்டில் நடந்த அவலம்..!!
The father who sexually harassed his daughter
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு சம்பத் நகரில் தராசு வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகள் ஒருவர் இருக்கிறார். அருகில் உள்ள தனியார் பள்ளியில் 11 படித்து வருகிறார். இந்நிலையில், தராசு வியாபாரி தனது மகள் என்று கூட பார்க்காமல் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் அந்த மாணவி மன அழுத்ததில் இருந்துள்ளார்.
தினம் இந்த கொடுமை நடந்து வருவதால் அந்த மாணவி செய்வதறியாது திகைத்துள்ளார். பொதுவெளியில் நடக்கும் பிரச்சனைகளை தந்தையிடம் வந்து முறையிடிவோம் ஆனால் தந்தையே இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது யாரிடம் சொல்வது என அவருக்கு தெரியவில்லை.
இந்நிலையில், ஒருகட்டத்தில் இதுகுறித்து தனது உறவினர்களுக்கு அந்த மாணவி தகவல் அளித்துள்ளார். இந்த தகவலை கேட்ட அவரது உறவினர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து இதுகுறித்து, அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்த காம கொடூரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The father who sexually harassed his daughter