மன்னார்குடி அருகே பரபரப்பு.! தொழிலாளியை அறிவாளால் வெட்டிக்கொன்ற விவசாயி.! - Seithipunal
Seithipunal


மன்னார்குடி அருகே தொழிலாளியை அறிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேல திருப்பாலக்குடி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சுவேந்திரன்(35). இவரது மனைவி கவிதா. இவர் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சக்கரவர்த்தி என்பவரிடம் பத்து ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சக்கரவர்த்தி சுவேந்திரனை வேலையில் இருந்து நிறுத்தினார்.

இதனால் இவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, சுவேந்திரன் சக்கரவர்த்தி வீட்டு வாசலில் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது சக்கரவர்த்தி வீட்டில் இல்லாததால் இது குறித்து அவரது மனைவி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி சுவேந்திரனை அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சுவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சக்கரவர்த்தியை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The farmer who murder the worker near mannargudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->