குடிபோதையில் தாயைக் கட்டையால் அடித்து கொன்ற மகன்.! நெய்வேலியில் பரபரப்பு.!
The drunken son beat his mother to death in Cuddalore Neyveli
கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் மகன் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பூம்புகார் சாலை பகுதியில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி பவுனம்மாள். இவர்களது மகன் தேவராஜ் (37). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்பொழுது தேவராஜின் தாயார் பவுனம்மாள், ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று தேவராஜிடம் கேள்வி கேட்டுள்ளார். இதில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போதையில் இருந்த தேவராஜ் ஆத்திரமடைந்து கட்டையை எடுத்து தாயை சரமாரியாக அடித்துள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பவுனம்மாளை வீடு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பவுனம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்த தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
The drunken son beat his mother to death in Cuddalore Neyveli