ஏசியால் ஏற்பட்ட விபரீதம்.!! மொத்த குடும்பத்துக்கும் ஏற்பட்ட கதி?
The disaster caused by air conditioner
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காவேரிபாக்கத்தில் ராஜிஎன்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் . பட்டறை கடை நடத்தி வரும் இவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் இல்லத்தில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அறையில் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு எற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
எனினும், வீட்டில் உறங்கி கொண்டிருந்த ராஜி, அவரது மனைவி கலா, மகன் கவுதம் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீட்டின் மற்றொரு அறையில் உறங்கியதால் ராஜியின் மற்றொரு மகன் கோவர்த்தனன், அவரது மனைவி ஆகியோர் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து மூவரின் உடலையும் கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
English Summary
The disaster caused by air conditioner