நடு ரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..! - Seithipunal
Seithipunal


நடுரோட்டில் கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை  கோயம்பேட்டில்  இருந்து சத்தியவேடு பகுதியில் இருந்து கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது காரின் இஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஒட்டுநர் உடனே காரை நிறுத்தி இறங்கி சென்று பார்த்துள்ளார். அப்போது கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. காரில் இருந்த இரு குழந்தைகள் உட்பட 9 பேர் காரில் இருந்து இறங்கியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The car caught fire in the middle of the road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->