மாடு குளிப்பாட்ட சென்ற சிறுவன்.. எதிர்பாரா விதமாக நடந்த அசம்பாவிதம்..! - Seithipunal
Seithipunal


மாடு குளிப்பாட்ட சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பெரியமேட்டுப்புதூரை சேர்ந்தவர் குமார். இவருக்கு கவுதம் (16) என்ற மகன் இருக்கிறான். கவுதம் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இன்று மாட்டு பொங்கல் என்பதால் அவர்கள் வீட்டில் உள்ள மாட்டை குளிப்பாட்ட சென்றார்.

அப்போது, மாட்டை கட்டியிருந்த கயிறு தோட்டத்தில் உள்ள மின் வயரில் சிக்கியது. அதனை எடுக்க முயற்சித்த போது மின் கம்பி அறுந்து விழுந்து கவுதம் மீது மின்சாரம் பாய்ந்தது.  இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy electic shocked dead


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->