பப்ஜி விளையாடியதை கண்டித்த பெற்றொர்., மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சிறுவன்..!! நெல்லையில் நடந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


ஆன்லைனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், திசையன்விளை  பகுதியில் வசித்து வருபவர் வள்ளிமயில். வள்ளிமயிலுக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இவரது மூத்த மகன் சஞ்சய்(15) என்பவர் அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சஞ்சய்க்கு புதிதாக செல்போன் ஒன்றை பெற்றோர் வாங்கி தந்துள்ளனர். 

இந்நிலையில், நாள் முழுவதும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார் அது மட்டுமின்றி இரவு நேரங்களிலும் செல்போனை பயன்படுத்தியுள்ளார் இதனால் அவரது பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் இதனை கண்டு கதறி அழுதுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் கேம் விளையாட கூடாது என்று கூறியதற்கு சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy committed suicide because his parents reprimanded him


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->