பூட்டிய வீட்டில் கருகிய நிலையில் மீட்கபட்ட தாய் - மகள்... கொலையா? தற்கொலையா என காவல்துறை தீவிர விசாரணை..!
The body of the mother-daughter was recovered from the locked house
தாய்-மகள் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். இரண்டு மகள்கள் மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில் இவர் இளைய மகளான மணிமேகலை உடன் வசித்து வருகிறார்.
காளியம்மாள் ரயில்வே நிலையத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தாழிடப்பட்ட வீட்டிற்குள் தாயும் மகனும் கருகி சடலமாக கிடந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணைகள் முப்பத்தி மூன்று வயதாகியும் திருமணம் வரன் அமையாததால் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு யாரேனும் அவர்களை கொலை செய்து விட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The body of the mother-daughter was recovered from the locked house