தள்ளுவண்டியில் அடையாளம் தெரியாத சிறுவனின் சடலம்... காவல்துறை தீவிர விசாரணை..!
The body of an unidentified boy in a trolley
தள்ளுவண்டியில் அடையாளம் தெரியாத சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேலத்தெரு பகுதியில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான தள்ளுவண்டி கடை உள்ளது. இந்த தள்ளுவண்டி கடையில் அடையாளம் தெரியாத சிறுவனின் சடலம் கிடைந்துள்ளது.
தகவலறிந்து சம்பவன் இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரதேபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் இரவில் அந்த சிறுவனின் உடலை யாரோ அங்கு விட்டு சென்றிருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சிறுவன் யார் என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The body of an unidentified boy in a trolley