"சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" - உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பங்கள்..!
thanthai periyar award application
1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கும் வகையில், பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் இந்த விருதுக்கான விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
thanthai periyar award application