தலையை துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை.. தஞ்சாவூரில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


முன்விரோதத்தால் வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் சிவகாமி அன்னை நகர் பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

மணிகண்டனிற்கும் - அதே பகுதியை சார்ந்த முத்துராமன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக முத்துராமன் தரப்பில் இருந்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று மணிகண்டன் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்த நிலையில், இரயில்வே தண்டவாளம் அருகே செல்கையில், அங்கு தயாராக மறைத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை சுற்றிவளைத்துள்ளது. 

பின்னர், அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த நிலையில், மணிகண்டனின் தலையை துண்டித்து அருகேயுள்ள கன்னியம்மன் கோவில் முன்புறம் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur youngster Murder due to Gang War 2 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->