திருமணம் முடிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மனமுடைந்து தற்கொலை..! 2 வாலிபர்கள், 15 வயது சிறுவன் கைது.!! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த பெண்ணுக்கு 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், பெண்மணி விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலமுருகன் (வயது 31). பாலமுருகனுக்கும் - பட்டுக்கோட்டை அருகேயுள்ள திட்டக்குடி கிராமத்தை சார்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகிக்கும் (வயது 26) கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் தற்போது வரை குழந்தைகள் இல்லை. 

இந்நிலையில், பாலமுருகன் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், தனது மாமனார் - மாமியாருடன் தமிழழகி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி இரவு தமிழழகி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, தூக்கில் பிணமாக இருந்த தமிழழகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தமிழழகியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்குள்ளாக, தமிழழகியின் தந்தை தனது மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துள்ளார் என்றும், அவரது மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடந்த வேண்டும் என்றும் துரை திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, இந்த தகவலை அறிந்த தஞ்சாவூர் உதவி ஆட்சியர் பாலசந்தர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பேராவூரணி அரசு மருத்துவமனையில் தமிழழகியின் உடல் பிரேத பரிசோதனை செய்கையில், அவரது உள்ளாடையில் கடிதம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர், 3 பேரின் பெயர்களை தமிழழகி எழுதி வைத்திருப்பதை அறிந்துள்ளனர்.

தமிழழகி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் குறித்து விசாரணை செய்கையில், அவர்கள் ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சார்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் ஆகாஷ் (வயது 21), தேநீர் கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 28) மற்றும் 15 வயது சிறுவன் என 3 பேரை கைது செய்தனர். இவர்கள் தமிழழகியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதை தெரிந்துகொண்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துள்ளார். 

இந்த விஷயத்தை விசாரணையில் உறுதி செய்த காவல் துறையினர் தமிழழகியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 பேரின் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Thiruchitrambalam Woman Sexual Torture and Suicide Name as Tamilazhagi Aged 26


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->