கர்ப்பிணி பெண் வயிற்றில் தீ வைத்த கொடூர மாமியார் விவகாரத்தில், பெண்ணின் பதைபதைப்பு வாக்குமூலம்...!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொட்டுசாவடி பகுதியை சார்ந்தவர் கோவிந்தராஜன். இவரது இரண்டாவது மகளின் பெயர் சங்கீதா (வயது 20). சூரியம்பட்டி பகுதியை சார்ந்த ராமய்யன் என்பவரின் மகன் முருகானந்தம். இவர்கள் இருவருக்கும் கடந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், திருமணம் முடிந்த நாட்களில் இருந்து சங்கீதாவின் மாமியார் புஷ்பவள்ளி வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், ஏழை குடும்பத்தினை சார்ந்த பெண்ணான சங்கீதா கொடுமைகளை தாங்கிக்கொண்டு, பெற்றோரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். மேலும், முருகானந்தம் எதனையும் கண்டுகொள்ளாது இருந்து வந்துள்ளார்.

சங்கீதா கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், புஷ்பவள்ளி சரமாரியாக அடித்து துன்புறுத்திய வந்துள்ளார். மேலும், 5 ஆவது மாதத்தின் போது வளைகாப்பு நடைபெற்ற நிலையில், வளைக்காப்புக்கு பின்னரும் சங்கீதாவை இரக்கமே இல்லாமல் தாக்கியுள்ளார். மேலும், முருகானந்தத்தின் தம்பியும் சங்கீதாவை தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளான்.

இந்த சமயத்தில், சங்கீதா மற்றும் அவரது வாரிசு உயிருடன் இருக்கக்கூடாது என்று எண்ணிய புஷ்பவள்ளி தனது இல்லத்தில் இருந்த மண்ணெண்ணெய்யை சங்கீதாவுடைய வயிற்றில் ஊற்றி தீவைத்ததை அடுத்து, அலறித்துடித்த சங்கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கீதா தனக்கு நடந்த கொடுமை மற்றும் தன்னை தாக்கியர்கள் குறித்த விபரத்தையும், தனக்கு ஏதும் ஆகும் பட்சத்தில், தனது குழந்தையை தனது பெற்றோரிடம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி வீடியோ பதிவு செய்து வாட்ஸப்பில் வாக்குமூலமாக அளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur pregnant girl murder attempt police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->