கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் தீவைத்த கொடூர மாமியார்... மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பெண்மணி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவாசாவடி பகுதியை சார்ந்தவர் புஷ்பவல்லி. இவரது மகனிற்கு அப்பகுதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். கணவன் மனைவி சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், புஷ்பவள்ளியின் மருமகள் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். 

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் நிலையில், சம்பவத்தன்று கர்ப்பிணி பெண்ணின் அலறல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில், கர்ப்பிணி பெண்ணின் உடலில் தீப்பற்றி இருந்துள்ளது. 

இதனையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மருத்துவமனையில் அறுவைசிகிச்சையின் மூலமாக குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். 

பெண்ணின் வயிற்றில் தீ எறிந்துள்ளதால் பெண்ணும், பெண்ணின் குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புஷ்பவள்ளியை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur pregnant girl murder attempt by her husband mother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->