#வீடியோ: முகநூல் லைவ்.. ஊருக்கு கறிவிருந்து.. லைவ்வை வைத்து விருந்து கும்பலை தூக்கிய காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் தியாக சமுத்திரம் வடக்குத்தெரு பகுதியை சார்ந்தவர் சின்ன குஞ்சு. இவரது மகன் பெயர் சிவகுரு (வயது 29). இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், கொரோனா வைரஸின் தாக்கத்தால் அமலாகியுள்ள ஊரடங்கின் காரணமாக சிவகுமார் மீண்டும் கிராமத்திற்கு வந்துள்ளார். 

இந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு வந்ததை மகிழ்ச்சிடுவான் கொண்டாட நினைத்த சிவகுமார் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அங்குள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு ஆடுவெட்டி கறிசமைத்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுள்ளனர்.

இந்த கறிவிருந்தை முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இது குறித்து தியாகசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலகர் திவ்யா (வயது 26), காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மீறி கறிவிருந்து தயார் செய்து சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோரின் மீது வழக்குப்பதிவு செய்து அனைவரையும் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanjavur police arrest 144 violent food video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->