#Breaking: 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ.. தஞ்சாவூரில் பரபரப்பு... தீயணைப்பு படை விரைவு.!
Thanjavur North Vasal Area House Fire Rescue Team Arrived 16 March 2021
50 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் தீப்பிடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள வடக்கு வாசல் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளது. இன்று வீட்டில் அனைவரும் இருந்த நிலையில், திடீரென அங்குள்ள குடிசை வீட்டில் மளமளவென தீப்பிடித்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், வீட்டில் இருந்த முதியவர்களை அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 30 க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur North Vasal Area House Fire Rescue Team Arrived 16 March 2021