பக்கத்து தெரு வரை அழுகிய துர்நாற்றம்.. கதவை திறந்து பார்க்கையில் காத்திருந்த அதிர்ச்சி.!!
Thanjavur Mystery death family members with 2 dog Police investigation
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் உள்ள வளவன்புரம் பகுதியில் உள்ள முன்புறத்தில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. இந்த வீட்டில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக கூடி வந்த பெண்மணி சாந்தி, தனது மகள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருந்து வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், வீட்டின் உரிமையாளர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்கையில், சாந்தி மற்றும் அவரது மகள், இரண்டு குழந்தைகள் பிணமாக இருந்துள்ளனர். மேலும், இவர்களின் இல்லத்தில் இருந்த இரண்டு நாய்களும் இறந்து கிடந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அனைவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thanjavur Mystery death family members with 2 dog Police investigation