மனைவி, குழந்தையை பார்க்க வந்தவரை அரிவாளால் சரித்த கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகேயுள்ள பகுதியை சார்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் அருண்ராஜ் (வயது 22). இவர் ஒளி-ஒலி அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சுவாமிமலை அருகேயுள்ள நாகக்குடி கிராமத்தை சார்ந்தவர் அம்பிகா (வயது 20). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தற்போது இருவருக்கும் ஆறு மாதமாகும் குழந்தை இருக்கும் நிலையில், தனது மனைவி மற்றும் குழந்தையை காண அருண்ராஜ் நாகக்குடி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு வயல்வெளி பகுதியில் நின்று கொண்டு இருக்கவே, மர்ம நபர்கள் அருண்ராஜை திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அருண்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். இதனையடுத்து மர்ம கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே, இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அருண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர் இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur murder police investigation 12 August 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->