வினையான விளையாட்டு.. குடும்பத்துடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல்.. பெண் பலியான சோகம்..!!
Thanjavur Murder case police investigation
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அடுத்துள்ள கார்காவயல் கிராமத்தை சார்ந்தவர் சக்திவேல் (வயது 55). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுந்தரி (வயது 50). இவரது மகள்கள் சண்முகப்பிரியா (வயது 24), கவுசல்யா (வயது 23), சந்தியா (வயது 22), பவுசியா (வயது 21) மற்றும் மகன் வசந்தனேசன் (வயது 19).
இவர்களின் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் குபேந்திரன் (வயது 60). இவர் விவசாயியாக இருந்து வரும் நிலையில், இவரது மனைவி சரோஜா (வாய்த்து 55). இவர்களின் மகன் குருபிரபு (வயது 28). இவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வசந்தசேனன் மற்றும் குருபிரபு ஆகிய இருவரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில், ஏற்பட்ட தகராறில் வசந்தனேஷனை குருபிரபு தாக்கியதாக தெரியவருகிறது.
இதனை அறிந்த வசந்தனேசனின் சகோதரிகள் நால்வரும் வந்து, குருபிரபுவிடம் இது குறித்து கேட்கவே, இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பும் ஆயுதத்தால் தங்களை தாக்கிக்கொண்டுள்ளனர்.
இந்த மோதலில் சண்முகப்பிரியா படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், வசந்தனேசன், கவுசல்யா, சந்தியா, பவுசியா ஆகியோர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரவிசந்திரன், குபேந்திரன், சரோஜா, குருபிரபு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thanjavur Murder case police investigation