வாங்கிய கடனை திரும்பி கொடுக்காது, கள்ளக்காதலனை வைத்து கடன் கொடுத்தவரை போட்டுத்தள்ளிய பெண்மணி.. தஞ்சையில் பகீர்.!!
Thanjavur murder case police investigation
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருங்குளம் பகுதியை சார்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 64). இவர் தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மருங்குளம் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான வாழைத்தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நிலையில், இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர் உடலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பான விசாரணையில், மருங்குளம் கோபால் நகரை சார்ந்த பூங்கொடி (வயது 45), பூங்கொடியின் கணவர் ஐய்யாசாமி (வயது 58) மற்றும் இளங்கோவன் (வயது 45) ஆகியோர் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், பூங்கொடி சுபாஷ் சந்திரபோஸின் தோட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில், பூங்கொடியின் சொத்து பாத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1 இலட்சம் கடன் வாங்கியுள்ளார்.
பல மாதம் ஆகியும் பணத்தை திரும்பி தராமல் பூங்கொடி இருந்த நிலையில், இதனால் இவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது. இந்த தகராறு முற்றியதால் பூங்கொடியின் கள்ளகாதலன் இளங்கோவனை வைத்து சுபாஷை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று பணத்தை வாழைத்தோட்டத்திற்கு வைத்து தருவதாக பூங்கொடி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சுபாஷ் தோட்டத்திற்குள் வந்த நிலையில், இளங்கோவன் தோட்டத்தில் அரிவாளுடன் மறைந்து இருந்துள்ளார். பூங்கொடியும், அய்யாசாமியும் தோட்டத்திற்குள் நிற்கவே, இளங்கோவன் சுபாஷ் சந்திரபோஸை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழக்கவே, மூவரும் தப்பி சென்றுள்ளனர்.. இது தொடர்பான விசாரணை மூவரிடமும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thanjavur murder case police investigation