மகனை காப்பாற்ற முயன்று, மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை.. தஞ்சாவூரில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


உயர் மின்னழுத்த கம்பியை தொடச்சென்ற மகனை காப்பாற்றிய தந்தை, பரிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சித்தாதிக்காடு பகுதியை சார்ந்தவர் கதிர்வேல் (வயது 34). இவர் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 

தற்போது, கொரோனா காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்த நிலையில், இன்று வழக்கம்போல தனது பணிகளை செய்துகொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்த நிலையில், இதனைக்கண்ட அவரின் இரண்டு வயது மகன் அன்புச்செல்வன், கம்பியை ஓடிச்சென்று பிடிக்க முயற்சித்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கதிர்வேல் மகனை காப்பாற்ற எண்ணி மகனை பிடித்து தள்ளிவிட்டு, அவர் எதிர்பாராத விதமாக மின்சார கம்பியின் மீது விழுந்துள்ளார். கதிர்வேலன் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், தூக்கி வீசப்பட்டுள்ளார். 

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த கதிர்வேலை மீட்ட அக்கம் பக்கத்தினர், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Kathirvel Died Save his Child Life from Broken Electric Line 19 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->