தாய் போல இருந்தாலே.. ஐயோ எம்புள்ள எங்க இருக்கோ?... அரசுமருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. தாய் கதறல்.!
Thanjavur Govt Hospital 4 Day Born Child Kidnapped by Strange Woman Police Investigation
அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது.
தஞ்சாவூரில் உள்ள பர்மா காலனி பகுதியை சார்ந்தவர் குணசேகரன் (வயது 24). இவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 22). இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ராஜலட்சுமி, கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக பிரசவ வலியால் அலறித்துடித்துள்ளார். இதனையடுத்து, குடும்பத்தினர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கவே, அன்றைய தினமே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால், பெற்றோரின் ஆதரவு இல்லாமல் இருந்துள்ளது. இதன்போது, ராஜலட்சுமி அனுமதி செய்யப்பட்டு இருந்த வார்டில் இருந்த பெண்மணி, ராஜட்சுமியிடம் என்ன உதவியென்றாலும் என்னிடம் கேளுங்கள் என்று கூறி உதவி செய்வது போல நடித்துள்ளார்.
இதனால் ராஜலட்சுமிக்கும் வரும் நாட்களில் பெண்ணின் மீது நம்பிக்கை ஏற்படவே, இன்று காலை ராஜலட்சுமியை குளித்துவிட்டு வரச்சொல்லி பெண்மணி அறிவுறுத்தியுள்ளார். மேலும், குழந்தையையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என நம்பிக்கை கூறவே, ராஜலட்சுமியும் குளிக்க சென்றுள்ளார்.
இதனை பயன்படுத்திக்கொண்ட பெண்மணி, பிறந்து 4 நாட்கள் ஆகிய பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்தி சென்றுள்ளார். குளித்துவிட்டுவந்து பார்த்த ராஜலட்சுமி குழந்தையை காணாததால், பதறியபடி மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியுள்ளார். பின்னர், இதுகுறித்து குணசேகரனுக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல் குணசேகரனின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்களும் மருத்துவமனையில் திரண்டனர். பின்னர், தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்கையில், ராஜலட்சுமிக்கு உதவுவதாக கூறி நடித்த பெண்மணி குழந்தையை கட்டைப்பையில் போட்டு கடத்தி சென்ற வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. பெண்மணியை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வரும் நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஆட்டோவில் செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur Govt Hospital 4 Day Born Child Kidnapped by Strange Woman Police Investigation