தஞ்சாவூரில் வடமாநில பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் கொலை முயற்சி விபரம்.. கைதான கும்பல்.. பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் சிங்கம்பட்டி பகுதியில் சாலையில் அதிவேகமாக வந்த காரில் இருந்து பெண்ணொருவர் தூக்கி வீசப்பட்டார்.. இந்த காட்சிகளை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி உள்ளாகினர். பின்னர் பெண்மணியை மீட்ட நிலையில், பெண்மணியை தூக்கி வீசிய கார் சம்பவ இடத்தில் இருந்து விரைந்து சென்றுள்ளது. பெண்மணியை கவனிக்கையில் அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டார் போலவும், உடல் சோர்வு மற்றும் உடலில் காயத்துடன் இருந்துள்ளார். 

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பெண் மேற்கு வங்கம் மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட நிலையில், தஞ்சாவூர் நகரில் உள்ள ஈஸ்வர் நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். 

இந்த பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும், வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் மற்றும் தண்டனைகள் என பல துயரத்தை அனுபவித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை நிறைவு பெற்றவுடன் இது குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். 

இந்நிலையில், காவல் துறையினரின் விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும், இதனால் அவர் கர்ப்பிணியானதும் தெரியவந்துள்ளது. மேலும், வீட்டு வேலைக்கு என்று அழைத்து வந்து பெண்மணியை விபச்சாரத்திற்கு வற்பறுத்தியதும், இதனால் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. 

இந்த பெண்ணை போன்று பல சிறுமிகளும், இளம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக வடமாநில சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பணிக்கு வரும் பட்சத்தில், இது போன்று பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது மீட்கப்பட்ட பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு பெண்மணி கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரை காரில் இருந்து தள்ளி கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur girl sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->