குடும்ப சண்டையில் தாயின் விபரீத முடிவு.. உயிருடன் பிழைத்தும் வாழ்நாள் தண்டனையை கொடுத்த தாய்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செவ்வப்பநாயக்கன்வாரி பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது மனைவி செந்தமிழ்செல்வி (வயது 37). இவர்களுக்கு சுவேதா என்ற 12 வயது மகள் மற்றும் கோகுல் செழியன் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. 

இதனைப்போன்று சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனமுடைந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்ய முடிவு செய்து, தான் இறந்துவிட்டால் தனது குழந்தைகளும் அனாதையாகி விடுவார்கள் என்று எண்ணி, அங்குள்ள கல்லணைக்கால்வாய் பகுதிக்கு வந்துள்ளார்.

குழந்தைகளுடன் கல்லணைக்கால்வாய் பாலத்திற்கு வந்த தமிழ்செல்வி மனதை கல்லாக்கி, தனது குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குழந்தைகள் இருவரும் காப்பாற்றக்கூறி சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரையும் தேடும் பணியில் ஈடுபடவே, செந்தமிழ்செல்வி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். குழந்தைகள் இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். குழந்தைகளை தேடும் பணி நடைபெற்று வந்தாலும், சிறுவனின் உடல் தஞ்சாவூர் கண்டித்தம்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை தேடி வருகின்றனர்.

செந்தமிழ்செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து கணவன் - மனைவியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், செந்தமிழ்செல்வி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur girl killed his baby due to husband wife problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->