சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகன்.. குடும்பத்தோடு சேர்ந்து தரமான சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பட்டீஸ்வரம் ஆனைக்காரன்பாளையம் பகுதியை சார்ந்தவர் நீலமேகம். இவரது மகன் செல்வமோகன் (வயது 35). இவர் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், இவரது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி செல்வமோகன் கை-கால்கள் கட்டப்பட்டு, தேனாம்படுகை ஆற்றங்கரையில் பிணமாக இருந்துள்ளார். இவரது உடலிலும் காயங்கள் இருந்த நிலையில், இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், செல்வமோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இவ்விசயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வ்சிரணையை துவங்கியதில் செல்வமோகனிற்கும், கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த கூலித்தொழிலாளிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் கீழ் அந்த கூலித்தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்த விசாரணையில், கூலித்தொழிலாளிக்கு 17 வயது மகள் இருந்த நிலையில், செல்வமோகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் சேர்ந்து கடந்த 1 ஆம் தேதி கண்டித்த நிலையில், செல்வமோகன் அவதூறாக பேசி பிரச்சனை செய்துள்ளான். 

மேலும், சிறுமியை கடத்தி சென்று சீரழித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால் குடும்பத்தினருக்கு ஆத்திரம் உச்சியை பிடிக்கவே, கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக சிறுமியின் தந்தை, தாய், உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur drive murder case culprit gives sexual torture child


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->