உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கல்லூரி மாணவி, விஷம் குறித்து தற்கொலை.!
Thanjavur College girl Sivasankari Suicide 23 April 2021
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கபிஸ்தலம் உள்ளிக்கடை கிராமத்தில் இருக்கும் சுதர்சன் தெருவை சார்ந்தவர் பழனிச்சாமி. இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரது மகள் சிவசங்கரி (வயது 18). சிவசங்கரி தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிவசங்கரிக்கு நீண்ட நாட்களாக குடல் புண் பிரச்சனை இருந்து வந்த நிலையில், இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் இருந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வந்த சிவசங்கரி, பூச்சி மருந்தை குடித்து மயங்கி இருந்துள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் செந்தில் வேலன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அன்பு நம்பியார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur College girl Sivasankari Suicide 23 April 2021